Categories

100நாள் வேலைத் திட்டம் ஒழிப்பு-எதிப்பு -ஆமூரில் சந்திரசேகரன் மாவட்ட கவுண்சிலர் ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்


திருவெண்ணெய்நல்லூர்  24

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற தொகுதி திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஊராட்சி  ஒன்றியத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கையை கண்டித்து, ஆமூரில் அஞ்சலகம் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சந்திரசேகரன் ஒன்றிய கழக செயலாளர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் ஒன்றிய அவைத்தலைவர் கலிவரதன் ஒன்றிய பொருலாளர் மைக்கல் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரேம் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பரமணியன் அய்யனார் ஸீதர் வீராசாமி மாவட்ட தொழிலாளர் அணி துணை தலைவர் சக்கரவர்த்தி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன்
ஊ.ம.தலைவர் சுப்பரமணியன் முத்துராமன் ஏரி நீர்பான தலைவர் ஊ.ம.து.தலைவர் முத்துக்குமரன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கரிகாலன் பெரியசெவலை ஊ.ம.தலைவர் வீரப்பன் மற்றும் சரவணபாக்கம் ஊ.ம.தலைவர் சிவராஜ் ஒன்றிய மாணரணி அமைப்பாளர் குருமூர்த்தி மற்றும் டி.கொளத்தூர் க.ஏழுமலை ஒன்றிய மாணரணி துணை அமைப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி : செய்தி ஆசிரியர், உள்ளாட்சி அரசு நாளிதழ்