
அரியலூர் நவ 11,
அரியலூர் – சிலிண்டர் ஏற்றி வந்த லாரி விபத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்த சம்பவம்- லாரி ஓட்டுநர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி ,எஸ். பி . மற்றும் தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி சிலிண்டர் ஏற்றி வந்த கனக வாகனம் அரியலூர் மாவட்டம் வாரணவாசி பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பும் போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் அனைத்தும் வெடித்து சிதறின இதன் காரணமாக லாரி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சத்தத்துடன் புகை மண்டலமாக காட்சியளித்தது.
அரியலூர் தனியார் விற்பனையாளர் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் என்பதும் லாரி ஓட்டுநர் கனகராஜ் என்பதும் தெரியவந்துள்ளது. ஓட்டுனர் தீக்காயங்களுடன் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும் மேலும் சிலிண்டர் வெடித்து சிதறுவதை தடுக்கும் வகையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி மற்றும் எஸ் பி பார்வையிட்டு வருகின்றனர்.
திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி வந்த லாரி சுழலில் லாரி ஓட்டுநர் பிரேக் பிடித்ததன் காரணமாக கவிழ்ந்துள்ளது. இதனால் லாரியில் ஏற்பட்ட தீயினால் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.













Leave a Reply