Categories

டெல்லி கார் வெடிப்புக்கு மூளையாக இருந்து தீவிரவாத இயக்கத்துக்கு  ஆள் சேர்த்த பெண் டாக்டர்!
*3 ஆண்டுகளாக திட்டமிட்டது  அம்பலம் *பரபரப்பு பின்னணி தகவல்!!


லக்னோ, நவ.13
டெல்லி கார் வெடிப்பு சம்­ப­வம் நாட்­டையே உலுக்கி போட்­டுள்­ளது. இதற்­கி­டையே தான் உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் லக்­னோவை சேர்ந்த மருத்­துவ கல்­லூ­ரி­யில் பேரா­சி­ரி­ய­ராக பணி­யாற்­றிய  பெண் டாக்­டர் ஷாகின் ஷாஹித் என்­ப­வர் கைது செய்­யப்­பட்­டார். இவர் பாகிஸ்­தா­னில் செயல்­பட்டு வரும் ஜெய்ஷ்-­இ-­மு­க­மது மக­ளிர் அமைப்­பின் இந்­தி­யப் பிரி­வுக்கு தலைமை தாங்கி வந்­த­தாக கூறப்­ப­டும் நிலை­யில் அவ­ரது பின்­னணி பற்றி திடுக்­கிட வைக்­கும் தக­வல் வெளி­யாகி உள்­ளது. மேலும் டெல்லி கார் வெடிப்பு சம்­ப­வத்­தில் இவ­ருக்­கும் தொடர்பு இருக்­க­லாம் என போலீ­சார் நம்­பு­கின்­ற­னர்.
டெல்­லி­யில் செங்­கோட்டை அருகே மெட்ரோ ரெயில் நிலை­யத்­தில் 1வது நுழைவு வாயி­லில் நேற்று முன்­தி­னம் மாலை­யில் செ்னறன ஹூண்­டாய் ஐ20 கார் வெடித்து சித­றி­யது. இதில் 13 பேர் இறந்­த­னர். மேலும் 15க்கும் அதி­க­மா­ன­வர்­கள் காய­ம­டைந்­த­னர்.
இந்த கார் வெடிப்பு சம்­ப­வத்­தில் பயங்­க­ர­வாத அமைப்­பி­ன­ருக்கு தொடர்பு இருக்­க­லாம் என்று கரு­தப்­ப­டு­கி­றது. குறிப்­பாக, பாகிஸ்­தா­னில் செயல்­பட்டு வரும் ஜெய்ஷ் இ முக­மது பயங்­க­ர­வாத அமைப்­பி­ன­ருக்கு தொடர்பு இருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கி­றது. இந்த அமைப்­பின் நிறு­வ­ன­ரான மசூத் அசாரை நம் நாடு தேடி வரு­கி­றது. இப்­ப­டி­யான சூழ­லில் தான் டெல்­லி­யில் கார் வெடிப்பு சம்­ப­வம் அதிர வைத்­துள்­ளது. டெல்லி போலீ­சா­ரு­டன், என்­ஐஏ எனும் தேசிய புல­னாய்வு முக­மை­யும் விசா­ர­ணையை தொடங்கி உள்­ளது. முதற்­கட்ட தக­வ­லின்­படி வெடித்து சித­றிய ஹூண்­டாய் ஐ20 காரை டாக்­ட­ராக இருக்­கும் உமர் என்­ப­வர் ஓட்டி சென்­ற­தும், கார் வெடித்­த­தில் அவ­ரும் இறந்­த­தா­க­வும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. அதா­வது கடந்த மாதம் அக்­டோ­பர் 19ம் தேதி காஷ்­மீ­ரின் பன்­போரா, நவ்­காம் உள்­ளிட்ட பகு­தி­க­ளில் போலீஸ் மற்­றும் நம் பாது­காப்­புப் படை­யி­ன­ருக்கு மிரட்­டல் விடுத்து ஜெய்ஷ் இ முக­மது பயங்­க­ர­வாத அமைப்பு போஸ்­டர்­களை ஒட்­டி­யி­ருந்­தது. கண்­கா­ணிப்பு கேம­ராக்­களை போலீ­சார் ஆய்வு செய்­த­தில், ‘ஒயிட் காலர்’ பயங்­க­ர­வாத முறைக்கு பயங்­க­ர­வா­தி­கள் மாறி­யி­ருக்­கும் திடுக்­கி­டும் தக­வல் கிடைத்­தது. குறிப்­பாக டாக்­டர்­கள் பல­ரும் பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்­பு­டை­யது பற்­றிய தக­வல் கிடைத்­தது.
தற்­போது இந்த ஒயிட்­கா­லர்’ பயங்­க­ர­வாத குழுவை சேர்ந்த ஷாகின் ஷாஹித் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இவர் உத்­தர பிர­தேச மாநி­லத்தை சேர்ந்­த­வர். லால்­பாக்­கில் உள்ள வீடு­க­ளில் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அவ­ரது சகோ­த­ரர் டாக்­டர் பர்­வேஸ் அன்­சா­ரி­யி­டம் பிடித்து விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. இதற்­கி­டையே தான் தற்­பாது ஷாகித் ஷாஹித் பற்­றிய திடுக்­கிட வைக்­கும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.
கைதான ஷாகின் ஷாஹித் மருத்­துவ கல்­லூ­ரி­யில் விரி­வு­ரை­யா­ள­ராக பணி­யாற்றி வந்­தார். கைதான ஷாகின் ஷாகித் முத­லில் கான்­பூ­ரில் உள்ள கணேஷ் சங்­கர் வித்­யார்த்தி மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் 2006ல் இருந்து பணி­யாற்­றி­னார். அதன்­பி­றகு அவர் 2009 மற்­றும் 2010 க்கு இடை­யில் கன்­னோஜ் அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் சிறிது காலம் பணி­யாற்­றி­னார். 2013ல் சொல்­லா­மல் விடுப்­பில் சென்ற நிலை­யில் மீண்­டும் பணிக்கு வர­வில்லை. அவ­ரி­டம் பல­முறை தொடர்பு கொள்ள முயன்­றும் அது நடக்­க­வில்லை. இத­னால் கடந்த 2021ல் பணி நீக்­கம் செய்­யப்­பட்­டார். ஷாகின் ஷாஹித்­தின் தக­ண­வர் பெயர் ஜாபர் ஹயாத். இவர் மகா­ராஷ்­டி­ராவை சேர்ந்­த­வர். கடந்த 2015ல் விவா­க­ரத்து பெற்­ற­னர். அடிப்­ப­டை­யில் ஷாகின் ஷாகித் அமை­தி­யா­ன­வர் என்று பல­ரும் கூறு­கின்­ற­னர். இத­னால் அவர் தற்­போது பயங்­க­ர­வா­தி­க­ளு­டன் தொடர்பு கொண்ட வழக்­கில் கைதாகி இருப்­ப­தால் பல­ரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­னர்.
இவர் பாகிஸ்­தானை தலை­மை­யி­ட­மாக கொண்டு செயல்­ப­டும் ஜெய்ஷ் இ முக­மது அமைப்­பின் மக­ளிர் பிரி­வுக்­கான இந்­திய தலை­வ­ராக இருந்­துள்­ளார். இவர் ஜமாத் உல் மொமி­னின் என்ற பெய­ரில் ஜெய்ஷ் இ முக­மது பயங்­க­ர­வாத அமைப்­பின் மக­ளிர் பிரிவை வலுப்­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளது.
இந்­தி­யா­வில் பயங்­க­ர­வாத குழு­வில் பெண்­க­ளின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்க வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில் அவர் செயல்­பட்டு வந்­துள்­ளார். மேலும் இவ­ருக்கு ஜெய்ஷ் இ முக­மது பயங்­க­ர­வாத அமைப்­பின் நிறு­வ­ன­ராக இருக்­கும் மசூத் அசா­ரின் சகோ­தரி சாதியா அசா­ரு­டன் தொடர்பு உள்­ளது. இந்த சாதியா அசார் தான் ஜெய்ஷ் இ முக­மது பயங்­க­ர­வாத அமைப்­பின் பாகிஸ்­தான் மக­ளிர் பிரி­வின் தலை­வ­ராக உள்­ளார். இவர் தான் நேர­டி­யாக ஷாகின் ஷாகீத்தை நிய­ம­னம் செய்து இருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கி­றது.
சாதியா அசா­ரின் கண­வர் யுசுப் அசா­ரும் ஒரு பயங்­க­ர­வாதி தான். இவர் கடந்த 1999ம் ஆண்­டில் நடந்த கந்­த­கார் விமான கடத்­தல் வழக்­கில் தொடர்­பு­டை­ய­வர். அவரை ஆப­ரே­ஷன் சிந்­தூர் நட­வ­டிக்­கை­யின்­போது நம் வீரர்­கள் தீர்த்து கட்­டி­னர். பஹ­வல்­பூ­ரில் ஜெய்ஷ் இ முக­மது அமைப்­பின் தலை­மை­யி­டத்தை நம் நாட்­டின் ஏவு­க­ணை­கள் தாக்­கி­ய­போது அவர் கொல்­லப்­பட்­டார். அது­மட்­டு­மின்றி கைதான ஷாகின் ஷாகித்­துக்கு நம் நாட்­டின் எல்­லை­யோர பயங்­க­ர­வா­தி­க­ளு­டன் தொடர்பு உள்­ளது. சோசி­யல் மீடியா வழி­யாக அவர் தொடர்­பில் இருந்­துள்­ளார். ஜெய்ஷ் இ முக­மது பயங்­க­ர­வாத அமைப்­புக்கு ஆத­ர­வாக ஆட்­களை திரட்­டும் வகை­யில் இந்த செயலை அவர் செய்து வந்­துள்­ளார். இவ­ருக்­கும் ஃபரி­தா­பாத்­தில் கைதான டாக்­டர் முஜா­மில் ஷகீ­லுக்­கும் தொடர்பு உள்­ளது.
அதே­போல் முஜா­மில் ஷகீ­லும், கார் வெடிப்பை நிகழ்த்­தி­ய­தாக கூறப்­ப­டும் உம­ரும் ஒரே மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றி­னர். இத­னால் தான் டெல்லி கார் வெடிப்­பில் ஜெய்ஷ் இ முக­மது அமைப்­புக்கு தொடர்பு இருக்­க­லாம் என்ற சந்­தே­கம் உள்­ளது.
இவ்­வாறு போலீ­ஸார் தெரி­வித்­த­னர்.