Categories

கோவையில் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி




கோவையில் இளம்பெண் பலாத்கார வழக்கு :  சுட்டுப் பிடிக்கப் பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா என்பதை போலீசார் நிரூபிக்க வேண்டும் – கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி ?


கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி சார்பில் கல்லூரி மாணவி பலாத்காரம்  செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அ.தி.மு.க மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசும்போது. கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அவரை பலாத்காரம் செய்தவர்கள் முள்புதரில் தூக்கி வீசி உள்ளனர். அப்போது அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளார்.
ஆனால் அவர் குரல் யாருக்கும் கேட்கவில்லையா ? அவர் கதறியும் வக்கிர புத்தி உள்ள அந்த கும்பல் அவரைவிடாமல் சீரழித்து உள்ளது
கோவை மாநகரம் ?
இந்த சம்பவத்தை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை நிலைய செயலாளர் வேலுமணி ஆகியோர் கண்டித்து உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி சம்பவத்தை கண்டித்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
போலீசார் இந்த சம்பவத்தில் துடியலூரில் வைத்து 3 குற்றவாளிகளை சுட்டுப் பிடித்ததாக கூறி உள்ளார்கள். ஆனால் அவர்களை யாருக்கும் காட்ட வில்லை. அவர்கள் உண்மை குற்றவாளிகளா ? அல்லது போலி குற்றவாளிகளா ?
என்ற சந்தேகம் உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மூலம் போலீஸ் நிலையத்தில் வைத்து அந்த குற்றவாளிகளை அடையாளம் காண செய்ய வேண்டும். இந்த சம்பவத்தை அ.தி.மு.க தலைவர்கள் கண்டித்து உள்ள நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் காவலரை சென்று சந்தித்து மனு கொடுத்த கனிமொழி எம்.பி ஒன்றும் கூறவில்லை .அதே போன்று கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சியில் இருந்த போலீசார் தற்போது இல்லை. இப்போது ஸ்டாலின் போலீஸ் தான் உள்ளது. இதுவரை இந்த ஆட்சியில் 4,150 குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

கோவை மாநகரம் தொழில் நகரம். இங்கு ஏராளமான பேர் வந்து செல்லும் விமான நிலையத்தின் அருகிலேயே இந்த சம்பவம் நடந்து உள்ளது. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இது ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு குற்றவாளிகள் முகத்தை ஏன் காவல்துறை காட்டவில்லை. காவல்துறை கபட நாடகம் செய்கிறது.
காவல்துறை உண்மை குற்றவாளிகளை பிடிக்க வேண்டும்.காவல்துறை கணக்குப்படி பேர் வன் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறை உண்மையாக பணியாற்ற வேண்டும்.
முதலமைச்சரே உண்மை குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் என உத்தரவு விட்டுள்ளார்.ஏன் ஒரு பெண்ணாக இருந்து திமுக பொதுச்செயலாளர் கனிமொழி போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.ஒரு பெண் சீரழிக்கப்பட்ட நிலையிலும் கம்யூனிஸ்ட் தரப்பில் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. முதலமைச்சரை கண்டித்து கண்டன அறிக்கை ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார். போலிக் குற்றவாளியா உண்மை குற்றவாளியா என காவல்துறை விளக்கம் கொடுக்க வேண்டும்.இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் வளர்மதி கூறியதாவது.  பலாத்காரம் விமான நிலையம் அருகே இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள நடந்த சம்பவம் கண்டிக்க தக்கது. காவல் துறையினர் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்.
அதேபோல் இந்த மூன்று பேரை எப்படி அடையாளம் கண்டீர்கள்,அதுவும் துடியலூர் பகுதிக்கு  சென்று  எப்படி உடனே பிடித்தீர்கள் என விளக்கம் அளிக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண் மயக்க நிலையில் உள்ள போது எப்படி குற்றவாளியை கைது செய்தீர்கள். யாரையோ பிடித்து தப்பிக்கலாம் என்று நினைக்காதீர்கள்.காவல் துறை குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
பெண்களை பாதுகாக்க அதிமுக சார்பாக மகளிருக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் இன்று 60 வயது பாட்டிக்கு பெப்பர் ஸ்ப்ரே கொடுக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது.ஒபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பண்டியன் திமுகவில் இணைந்து குறித்த கேள்விக்கு அவர் ஒரு அணியிலிருந்து தான் சென்றிருக்கிறார் அதிமுகவிலிருந்து செல்ல வில்லை.அதிமுக என்பது ஒரு கடல்.இது போன்ற விஷயங்களை  எடப்பாடி பழனிச்சாமி தூசி தட்டி விட்டு சென்று கொண்டு இருக்கிறார் என கூறினார்.