Categories

தாளவாடி அடுத்த ஆசனூர் அருகே
மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

சிறுத்தை நடமாட்டம்….


ஈரோடு அக் 31,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது தமிழகம் – கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் அதிகாலை சத்தியமங்கலம் – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே செம்ம திட்டு என்ற இடத்தில் சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை நடமாடியதை
கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். உடனே காரில் இருந்த நபர்கள் அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனிடையே வாகனங்கள் நிற்பதைக் கண்ட சிறுத்தை சிறிது நேரத்திற்குப் பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசனூர் வனத்துறையினர்  வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்,
இரவு நேரங்களில் வாகனங்களில் இருந்து கீழே இறங்க வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.