Categories

ஒற்றை காட்டு யாணை அட்டகாசம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை வேண்டுகோள்


தர்மபுரி டிச 18,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எருதுகூடஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, பிக்கனஅள்ளி உள்ளிட்ட காட்டு பகுதிகளில் இருந்து காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள், மான் போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது உணவு தேடி கிராமங்களுக்குள் வரும் நிலை தொடர்கிறது.

இதனால் விவசாய நிலங்கள் சேதமடைவதுடன், மனிதர்களின் உயிருக்கும், விலங்குகளின் உயிருக்கும் ஆபத்து உருவாகி வருகிறது.



வனத்துறையினர்
யானைகள் காட்டை விட்டு வெளியேறாமல் தடுக்க யாணைப்பள்ளம் மற்றும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், பல கிராமங்களில் அத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் பாலக்கோடு சுற்றுவட்டாரங்களில் யானை தாக்குதலால் மூவர் உயிரிழந்துள்ளனர்.



கடந்த ஒரு வாரமாக ஒரு ஒற்றை காட்டு யாணை வனப்பகுதியை விட்டு வெளியேறி தண்டுகாரண
அள்ளி, வாழைத்தோட்டம், காட்டுமாரியம்மன் கோயில், காவேரியப்பன்
கொட்டாய், கூசுக்கல், எருதுகூடஅள்ளி, பொப்பிடி, நிலகுட்டஅள்ளி, தீபஅள்ளி, பெல்ரம்பட்டிக்
கூட்ரோடு, செங்கோடப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் வயல்களில் இரவு நேரங்களில் அட்டகாசம் செய்து வருகிறது.


இதனால் கிராமவாசிகள் அச்சத்தில் வாழ்கிறார்கள். வனத்துறை அதிகாரிகள் கிராமங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இரவு நேரங்களில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன், காப்புக்காடுகளை சுற்றி யாணைப்பள்ளம் மற்றும் சோலார் மின் வேலிகள் உடனடியாக அமைக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.