
திமுக எம் பி வருகையையொட்டி குப்பைகளை அகற்றி தடுப்புகள் வைத்து மறைத்த சம்பவம் கோவை கரும்புக்கடை பகுதியில் நிகழ்ந்துள்ளது
கோவை உக்கடம் அருகே உள்ள கரும்புக்கடை ஆசாத் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடந்ததாக மக்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவி, துர்நாற்றம் வீசும் சூழ்நிலையில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், திமுக எம்பி வருகையை முன்னிட்டு திடீரென அந்த பகுதி சுத்தப்படுத்தப்பட்டதுடன், குப்பை மேடாக காட்சியளித்த இடங்கள் அலங்காரம் செய்யப்பட்டு, தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு மறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிப்படையாக சுத்தமாக உள்ளது போல காட்டும் முயற்சியாக இது நடந்துள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குப்பைகள் நிரம்பியிருந்த பகுதிகளை தற்காலிகமாக மறைக்கும் விதமாக துணிகள், பேனர்கள் மற்றும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவசரமாக நடவடிக்கை எடுத்தது போல தோற்றமளிக்க முயன்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. ஆனால், அடிப்படை சுகாதார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை என்பதே மக்கள் குற்றச்சாட்டு.
இந்த சம்பவம், “விஐபி வருகைக்கு முன் மட்டும் மேக்கப் வேலை” என்ற விமர்சனத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. பொதுமக்கள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டு, முக்கிய அரசியல் நபர்கள் வருகைக்கு முன்னதாக மட்டும் மேற்பரப்பில் சுத்தம் செய்வது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.
.














Leave a Reply