
கோவை அரசு மருத்துவமனை : இருப்பிட மருத்துவர் பணி சுமைகளை அதிகரித்து, கொடுமைப்படுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்.

கோவை மட்டுமின்றி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள், கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு, சராசரியாக 7000 முதல் 9000 பேர் வரை புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு நூற்றுக் கணக்கான தூய்மை பணியாளர்கள், தனியார் நிறுவனத்தின் மூலமாக, ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு காவல் பணிக்காக 120 பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி
சரவணபிரியா பணி சுமைகளை அதிகரித்தும், மேலும் பணிக்கு விடுமுறை எடுத்தால் அவர்களை பணி நீக்கம் செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இருப்பிட மருத்துவ அதிகாரி போலீசில் புகாரளித்து கைது செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
அவர், பணிக்கே காலை 10.45 மணிக்கு வந்துவிட்டு 1.45மணிக்கு வீட்டிற்கு சென்றுவிடுவதாகவும், ஒப்பந்த ஊழியர்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவதாகவும், ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க அவர்களிடமிருந்து 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு ஏற்கனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இருப்பிட மருத்துவ அதிகாரியை கண்டித்து ,
மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவமனையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
பேட்டி தூய்மைப்பணியாளர்கள்















Leave a Reply