Categories

புதுச்சேரியில்  விஜய் பிரசாரம்; துப்பாக்கியுடன் வந்த நபரால்  பரபரப்பு!


புதுச்­சேரி, டிச.9–
கரூர் கூட்ட நெரி­சல் சம்­ப­வத்­திற்கு பின்­னர் 72 நாள்­க­ளுக்கு பிறகு புதுச்­சே­ரி­யில்  நேற்று திறந்­த­வெளி பொதுக்­கூட்­டத்­தில் விஜய் பிர­சா­ரம் செய்­தார். இந்த கூட்­டத்­திற்கு துப்­பாக்­கி­யு­டன் வந்த ஒரு நப­ரால் திடீ­ரென பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.
தமி­ழ­கத்­தில் அடுத்த ஆண்டு 2026 சட்ட சபை தேர்­தல் நடை­பெற உள்­ளது. அதை­யொட்டி த.வெ.க.(தமி­ழக வெற்­றிக் கழ­கம்) தலை­வர் விஜய் கடந்த செப்­டம்­பர் 13–ஆம் தேதி தனது பிர­சா­ரத்தை தொடங்­கி­னார். வாரந்­தோ­றும் சனிக்­கி­ழ­மை­க­ளில் பிர­சா­ரம் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டது.
அதன்­படி பிர­சா­ரம் நடை­பெற்ற நிலை­யில் 3–வது வார சனிக்­கி­ழ­மை­யில் அதா­வது செப்­டம்­பர் 27–ஆம் தேதி கரூ­ரில் நடந்த பிர­சா­ரத்­தின் போது கடு­மை­யான கூட்ட நெரி­சல் ஏற்­பட்­டது. இதில் சிக்கி 41 பேர் உயி­ரி­ழந்­த­னர். 100–க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர்.
அதைத்­தொ­டர்ந்து அவ­ரது பிர­சா­ரம் முடங்­கி­யது. அதன் பின்­னர் ஒரு மாதம் கழித்து அவர் கூட்ட நெரி­ச­லில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பத்­தி­னரை சென்­னைக்கு அழைத்து பேசி­னார். அவர்­க­ளுக்கு நிவா­ரண உதவி வழங்­கி­னார். அதைத்­தொ­டர்ந்து காஞ்­சி­பு­ரத்­தில் ஒரு தனி­யார் கல்­லூ­ரி­யில் மக்­கள் சந்­திப்பு நிகழ்ச்­சியை தொடர்ந்­தார்.
பின்­னர் சேலத்­தில் ரோடுஷோ மற்­றும் பொதுக்­கூட்­டம் நடத்த அனு­மதி கேட்­டார். ஆனால் கார்த்­திகை மற்­றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை கார­ணம் காட்டி போதிய பாது­காப்பு வழங்க முடி­யாது என கூறி அனு­மதி அளிக்க போலீ­சார் மறுத்து விட்­ட­னர். இத­னால் அங்கு பிர­சா­ரம் நடத்­து­வ­தில் சிக்­கல் ஏற்­பட்­டது. அதன் பின்­னர் ஈரோட்­டில் பிர­சா­ரம் நடத்த த.வெ.க.வினர் ஏற்­பாடு செய்­த­னர். அங்­கும் பாது­காப்பு கார­ண­மாக பிர­சா­ரத்­திற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டது. தற்­போது வேறு இடத்­தில் பொதுக்­கூட்­டம் நடத்த அனு­மதி கேட்­கப்­பட்­டுள்­ளது.
இது போன்று தொடர்ந்து சிக்­கல் ஏற்­பட்ட நிலை­யில் புதுச்­சே­ரி­யில் கடந்த 5–ஆம் தேதி ரோடுஷோ மற்­றும் பொதுக்­கூட்­டம் நடத்த த.வெ.க.வினர் அனு­மதி கேட்­ட­னர். அங்­கும் கரூர் சம்­ப­வத்தை கார­ணம் காட்டி ரோடுஷோ நடத்த அனு­மதி மறுக்­கப்­பட்­டது. ஆனால் பொதுக்­கூட்­டம் நடத்­திக்­கொள்­ள­லாம் என அனு­மதி வழங்­கப்­பட்­டது.
அதற்­காக போலீ­சார் பல நிபந்­த­னைளை விதித்­த­னர். அதா­வது பிரா­சர பொதுக்­கூட்­டத்­தில் புதுச்­சே­ரியை சேர்ந்த கியூ­ஆர் கோடு பாஸ் வைத்­தி­ருக்­கும் 5000 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர். அண்டை மாநி­ல­மான தமிழ்­நாட்டை சேர்ந்­த­வர்­கள் மற்­றும் புதுச்­சேரி மாநி­லத்தை ஒட்­டி­யுள்ள தமி­ழக மாவட்­டங்­களை சேர்ந்­த­வர்­கள் கூட்­டம் நடை­பெ­றும் மைதா­னத்­திற்­குள் நுழைய அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள். சிறு­வர்­கள்,கர்ப்­பி­ணி­கள்,முதி­ய­வர்­கள் கூட்­டத்­தில் பங்­கேற்க அனு­மதி இல்லை.
மேலும் பொதுக்­கூட்­டம் நடத்த மேடை அமைக்­க­வும்,மேஜை நாற்­கா­லி­கள் போட­வும், அனு­மதி இல்லை. விஜய் பிர­சார வாக­னத்­தில் இருந்து மட்­டுமே பேச வேண்­டும் என்­றும் போலீ­சார் கட்­டுப்­பா­டு­கள் விதித்­த­னர்.  இவற்றை ஏற்­றுக்­கொண்ட த.வெ.க.வினர் புதுச்­சே­ரி­யில் இன்று விஜ­யின் பிர­சா­ரத்­திற்கு ஏற்­பாடு செய்­த­னர். அதைத்­தொ­டர்ந்து 73 நாள்­க­ளுக்கு பிறகு பொது­வெ­ளி­யில் நடை­பெ­றும் விஜ­யின் பிர­சார பொதுக்­கூட்­டம் புதுச்­சேரி உப்­ப­ளம் துறை­முக மைதா­னத்­தில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடை­பெற்­றது.
இதில் கலந்து கொண்டு விஜய் பேசி­னார். இதற்­காக அவர் சென்னை நீலாங்­க­ரை­யில் உள்ள தனது வீட்­டில் இருந்து இன்று காலை கார் மூலம் புதுச்­சேரி வந்­த­டைந்­தார். பொதுக்­கூட்­டம் நடை­பெற்ற இடத்­தில் மேடை எது­வும் அமைக்­கப்­ப­ட­வில்லை. எனவே, பிர­சார வேனில நின்­ற­ப­டியே விஜய் பேசி­னார்.
விஜ­யின் பொதுக்­கூட்­டத்­தில் கலந்து கொள்­வ­தற்­காக புதுச்­சேரி உப்­ப­ளம் துறை­முக மைதா­னத்­தில் ஏரா­ள­மா­னோர் திரண்­ட­னர்.
இவர்­க­ளில் கியூ­ஆர் கோடு பாஸ் வைத்­தி­ருந்த 5000 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். மற்­ற­வர்­கள் யாரும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. இத­னால் பொதுக்­கூட்­டத்­திற்கு வந்­த­வர்­க­ளுக்­கும், போலீ­சா­ருக்­கும் இடையே கடும் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது.
ஒரு பாஸ்க்கு 2 பேர் அனு­ம­திக்­க­ப­டு­வர் என த.வெ.க.வினர் கூறி­ய­தா­க­வும், ஆனால் போலீ­சார் ஒரு­வரை மட்­டுமே செல்ல அனு­ம­தித்­த­தா­க­வும் கூறி தக­ராறு செய்­த­னர். மேலும் கியூ­ஆர் கோடு பாஸ் இல்­லாத ஏரா­ள­மா­னோர் பொதுக்­கூட்­டம் நடை­பெற்ற உப்­ப­ளம் மைதா­னத்­திற்கு வெளியே திரண்டு நின்று எங்­களை உள்ளே விடுங்க என போலீ­சா­ரி­டம் கெஞ்­சி­னர்.ஆனால் கியூ­ஆர் கோடு பாஸ் இல்­லா­த­வர்­கள் உள்ளே செல்ல போலீ­சார் அனு­ம­திக்­க­வில்லை.
பொதுக்­கூட்­டம் நடை­பெற்ற மைதா­னத்­திற்கு செல்­ப­வர்­கள் மெட்­டல் டிடெக்­டர் வாசல் வழி­யாக மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.
அப்­போது ஒரு­வர் சென்ற போது மெட்­டல் டிடெக்­டர் கருவி பீம்…­பீம்… என சத்­த­மிட்­டது. அதைத்­தொ­டர்ந்து அந்த நபரை பிடித்து போலீ­சார் சோதனை செய்­த­னர். அப்­போ து அவர் தனது இடுப்­பில் ஒரு கை துப்­பாக்­கியை செரு­கிய நிலை­யில் வைத்­தி­ருந்­தார்.
இத­னால் அங்கு பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.