கோவை அக் 26,
ஓய்வு பெற்ற அரசு தலைமை பொறியாளரிடம் முறையற்ற பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக கூறி 29.8 லட்சம் மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.அதன் விபரம் வருமாறு
தமிழக அரசின் சென்னையில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அதிகாரி கோவையில் வசித்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், உங்கள் வங்கிக் கணக்கில் முறையற்ற பரிவர்த்தனை நடந்து உள்ளதாக கூறி உள்ளனர். அப்போது அவர் என் மீது தவறில்லை எனக் கூறவே அந்த மர்ம நபர்கள் உங்கள் இந்தியன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஹெச்.டி.எஃப்.சி என்ற வங்கிக் கணக்கிற்கு அனுப்புங்கள் சரியாக இருந்தால் திருப்பி அனுப்புகிறோம் என்று கூறி உள்ளனர்.
அதனை நம்பிய அவர் வங்கியில் இருந்த 29,88.000 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் அந்த பணம் மீண்டும் அவருக்கு வராததால், அவருக்கு வந்த அலைபேசி எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பணத்தில் இருந்து ஆறு லட்ச ரூபாயை அந்த மோசடி கும்பல் எடுத்து உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து ஆறு லட்ச ரூபாய் பணத்தை எடுத்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த நபீல் என்பதும், அவருடன் ஹரிஷ் (எ)குட்டாஸ் மற்றும் முகமத் ராமீஸ் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

















Leave a Reply