
திருப்பெரும்புதூர்.டிச.6–
திருப்பெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் ரூ. 200 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிக்டெக் தொழிற்சாலையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .அங்கு வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் ரூ. 200 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிக்டெக் என்ற தொழிற்சாலை அமைந்துள்ளது.
தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு தொழில்துறை எஸ்டேட் ஆகும். மின்னணு உற்பத்தி, குறைக்கடத்திகள், நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் ஐ டி வன்பொருள் உற்பத்திக்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, மின்னணு மற்றும் மின் கூறுகள் உற்பத்தித் துறைகளை ஆதரிப்பதற்காக இந்தப் பூங்கா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவீன உள்கட்டமைப்பு, அரசாங்க சலுகைகள் மற்றும் முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு மூலோபாய அருகாமையில் இருப்பதால், பிள்ளைப்பாக்கம்தொழில்துறை பூங்கா, இந்தியாவில் முன்னணி மின்னணு உற்பத்தி மையமாக தனது நிலையை வலுப்படுத்தும் தமிழ்நாட்டின் முயற்சிகளில் ஒரு முக்கிய பகுதியாகும்.
இப்புதிய தொழிற்சாலை திறப்பு விழா இன்று காலை 9.30 மணியளவில் நடந்தது. முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின்இப்புதிய தொழிற்சாலையை திறந்து வைத்தார் .
முன்னதாக இந்த தொழிற்சாலையை திறந்து வைக்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில், மேள–தாளம், பேண்டு வாத்தியம் முழங்க பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.














Leave a Reply